வவுனியா தேக்கவத்தை கிராமத்தில் பொங்கல் விழா நிகழ்வுகள்!!

730

வவுனியா தேக்கவத்தை கிராமத்தில் பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்வு நேற்று முன்தினம் (09.02.2019) மாலை 6.30 மணிக்கு வவுனியா நகரசபை உறுப்பினர் சமந்தா செபராணி தலைமையில் நடைபெற்றது.

தேக்கவத்தை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர்கள் மற்றும் மதகுருமார்கள் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

பொங்கல் பானை வைக்கப்பட்டு சர்வமதக்கொடிகள் கட்டப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன், தேசியகீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.

தைத்திருநானை முன்னிட்டு நடத்தப்பட்ட இந் நிகழ்வில் தேக்கவத்தை இளைஞர் கழகம் மற்றும் சிறுவர் கழகங்கள் இணைந்து கலை நிகழ்வுகளை நடாத்தியிருந்தன.

நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான எஸ்.சேனாதிராசா, ரி.ராஜலிங்கம், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.