மோடியின் பதிவினால் இந்தியாவின் மருமகளான இலங்கைப் பெண்!!

602


இந்தியாவின் மருமகளான இலங்கைப் பெண்



இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கீச்சகப் பதிவுக்கு தனது விரும்பத்தை (like) செய்திருந்த இந்திய இளைஞனும், அதே பதிவிற்கு தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்திய இலங்கைப் பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது.



பஞ்சாப் மாநிலம் குச்ரோட் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்த் மகேஷ்வரி, பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு கீச்சகப் பதிவினை (டிவீட்டை) இவர் லைக் செய்துள்ளார். அதே டிவீட்டை இலங்கையை சேர்ந்த ஹர்ஷினி எதீரிசிங்கே என்ற பெண்ணும் லைக் செய்துள்ளார்.



இந்த லைக் மூலமாக இருவரும் கடந்த 2015-இல் நண்பர்களாகியுள்ளனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரும் 2017-ஆம் ஆண்டு சந்தித்துள்ளனர்.


இந்திய கலாச்சாரத்தை புரிந்துகொள்வதற்காக ஹர்ஷினி இந்தியாவில் படிக்க விரும்பினார். அதேசமயம், கோவிந்த் பொறியியல் படிப்பை முடித்திருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இவர்களது காதல் விஷயத்தை அறிந்து கொண்ட ஹர்ஷினியின் தந்தை, கோவிந்தை இலங்கைக்கு அழைத்து 2 மாதம் தங்களுடன் தங்கவைத்தார். அப்போது, ஹர்ஷினியின் குடும்பத்தாருக்கு கோவிந்தை பிடித்துள்ளது.


அதன்பிறகே, இவர்களது காதலுக்கு ஹர்ஷினியின் தந்தை சம்மதம் தெரிவித்துள்ளார். ஹர்ஷினியின் குடும்பத்தினர் பௌத்த மதத்தை பின்பற்றுகின்றனர். கோவிந்தும் சைவம் என்பதால் அவர்களுக்கு இந்த விவகாரமும் தடங்கலை ஏற்படுத்தவில்லை.

இதையடுத்து, இவர்கள் இருவரும் காதலர் தினத்துக்கு 4 நாட்கள் முன்னதாக கடந்த 10-ஆம் திகதி திருமணம் செய்துகொண்டனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.