வவுனியாவில் முடிவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞனின் சாதனைப் பயணம்!!

829

 

நாட்டிலுள்ள சமூகங்களுக்கிடையே நல்லுறவையும் சமாதானத்தையும் ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தியும் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனக் கோரியும் நாடு பூராகவும் செல்லும் வகையில் யாழில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பயணம் இன்று (16.02.2019) வவுனியாவில் முடித்து கொள்ளப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளியான மக்கீன் முகமட் அலி என்பவர் கடந்த முதலாம் திகதி இந்தப் பயணத்தை யாழில் ஆரம்பித்திருந்தார். யாழிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயணம் கொழும்பு காலி மாத்தறை என நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று 15 நாட்களுடன் இன்று வவுனியாவில் முடித்துக் கொண்டார்.

தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் செல்லும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட இப் பயணமானது 1400 கிலோ மீற்றர் தூரம் சென்று வந்த நிலையிலையே இன்று முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் போது தனக்கு ஆதரவை வழங்கிய தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் அத்தோடு ஊடகங்களுக்கும் இதனை ஏற்பாடு செய்த அமைப்பிற்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது கோரிக்கைகள் தொடர்பில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்காக தான் காத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்வின் இறுதியில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் நிதியில் மாற்றுத்திறனாளியான மக்கீன் முகமட் அலிக்கு முச்சக்கரவண்டி ஒன்று வழங்கி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.