முல்லைத்தீவில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலி!!

666

வாகன விபத்தில் ஒருவர் பலி

முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, கொக்கிளாய் வீதியில் நேற்று இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செம்மலை பகுதியினை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செ.பாஸ்கரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.