லொறி மோதி வயோதிபப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!!

506

வயோதிபப் பெண் உயிரிழப்பு

மட்டக்களப்பு -காத்தான்குடி, ஆரையம்பதி பிரதான வீதியினூடாக சென்றுக்கொண்டிருந்த வயோதிப பெண் மீது லொறி மோதியுள்ளது. இவ் விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு – கல்முனை, பிரதான வீதியால் களுவாஞ்சிகுடியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அரச வாகனமே இவ்விபத்திற்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் குழந்தைவேல் நாகரெத்தினம், எனும் 50 வயதுடைய வயோதிபப் பெண் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்து தொடர்பான சிசி.ரி.வி காணொளி வெளியாகி உள்ளது.