142 பயணிகளுடன் கொழும்பிலிருந்து சென்ற ஸ்ரீலங்கன் விமானத்திற்கு ஏற்படவிருந்த பாரிய ஆபத்து!!

323

விமானத்திற்கு ஏற்படவிருந்த பாரிய ஆபத்து

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று பாரிய ஆபத்தில் இருந்து அதிஷ்டவசமாக தப்பியுள்ளது. நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானத்தின் டயர் வெடித்துள்ளதாக தெரிய வருகிறது.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான UL 121 விமானம் ஒன்றிற்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து பயணித்த விமானம் ஒன்று நேற்று காலை 8.40 மணியளவில் சென்னையை சென்றடைந்துள்ளது.

142 பயணிகளுடன் சென்ற விமானம் தரையிறக்கும் போது விமானத்தின் டயர் வெடித்துள்ளது. எனினும் பயணிகள் காயமின்றி தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.