வவுனியாவில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் படுகாயமடைந்த மாணவி மரணம்!!

438


மாணவி மரணம்



வவுனியா – மடுக்கந்தை, மயிலங்குளம் பகுதியிலுள்ள வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் படுகாயமடைந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த அனர்த்தம் நேற்றுமுன் தினம் மதியம் இடம்பெற்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட 16 வயது பாடசாலை மாணவி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.



வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் குறித்த மாணவி சமைப்பதற்காக சமையலறைக்கு சென்று அடுப்பினை உபயோகித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.



சம்பவத்தின் பின் பாதிக்கப்பட்ட மாணவி உடனடியாக அயலவர்களால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மாணவியின் நிலைமை நேற்று கவலைக்கிடமாக காணப்பட்ட நிலையில் அவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.