வவுனியா நகரசபையின் உடல் வலுவூட்டல் நிலையம் பயிற்சியாளர் இல்லாத நிலையில்!!

313

உடல் வலுவூட்டல் நிலையம் பயிற்சியாளர் இல்லாத நிலையில்

வவுனியா நகரசபையினரின் உடல் வலுவூட்டல் நிலையம் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கிவருவதாகவும் அங்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு தகுதியான பயிற்றுவிப்பாளர் எவரும் இல்லை என்றும் உடல் வலுவூட்டல் நிலையத்திற்குச் செல்லும் அங்கத்தவர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

வவுனியா நகரசபையிலுள்ள உடல் வலுவூட்டல் நிலையத்திற்கு அண்மையில் உபகரணங்கள் சில கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் அது தரமற்றவையாகவும், உபயோகிக்க முடியாமலும் நீண்டகாலமாக பாவனையற்ற நிலையில் அங்கு காணப்படுகின்றது.

நகரின் மத்தியிலுள்ள நகரசபையினரின் பூரண கட்டுப்பாட்டிலுள்ள உடல் வலுவூட்டல் நிலையத்திற்கு ஒருவரிடமிருந்து ஆயிரம் ரூபா முற்பணமாகவும் மாதாந்தம் 750 ரூபாவும் நகரசபையினரால் பணம் அறவிடப்பட்டு வருகின்ற நிலையிலும் அங்கு பயிற்றுவிப்பாளர் உட்பட நிலையம் சுகாதாரம் இன்றியும் காணப்படுகின்றது.

உடல் வலுவூட்டல் நிலையத்திற்கு பயிற்றுவிப்பாளர் இன்மையால் பலர் அங்கு செல்வதில்லை தற்போது இருக்கும் அங்கத்தவர்களுக்குச் சரியான முறையில் பயிற்றுவிப்பதற்கு பயிற்றுப்பாளர் இன்மையால் கடந்த பல வருடங்களாக வவுனியா நகரிலிருந்து உடல் வலுவூட்டல் போட்டியிற்கு செல்லவில்லை.

இது வவுனியா நகரிற்கு ஒரு குறைபாடாகவே காணப்படுகின்றது. பல திறமையாளனவர்கள் இருந்தும் நகசரபையினரால் இனங்கண்டு அவர்களை பயிற்றுவிப்பாளர்களாக இணைத்துச் செயற்பட முடியவில்லை. நகரின் மத்தியிலுள்ள உடல் வலுவூட்டல் நிலையத்திற்கு பலர் செல்வதற்கு தயார் நிலையிலிருந்தும் அங்குள்ள குறைபாடுகளினால் பலர் செல்வதைத்தவிர்த்து வருகின்றனர்.

நகரசபையின் இக்குறைபாடுகள் தொடர்பாக நகரசபை உப நகர பிதா சு.குமாரசாமியிடம் இன்று வினவிய போது, உடல் வலுவூட்டல் நிலையத்திற்கு பயிற்றுவிப்பாளர்களாக பணிபுரிவதற்கு 21பேரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள சபை அமர்வில் இவ்விடயங்கள் குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மலசல கூடத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதாக நகரசபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. மலசலகூடத்தை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. துப்பரவுப் பணியாளர்கள் இருவர் கடமையாற்றி வருகின்றனர். எனவே துப்பரவின்மை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மேலும் தெரிவித்துள்ளார்.