ஆசிரியருக்கு விளக்கமறியல்
மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபரை இன்றைய தினம் யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ். பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியிடம் தகாத முறையில் நடந்த சம்பவம் கடந்த 11ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இவ் விடயம் தொடர்பில் யாழ். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த ஆசிரியரை இன்றைய தினம் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அவருக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இவ் விடயம் தொடர்பில் குறித்த ஆசிரியர் கருத்து தெரிவிக்கையில்,
“ தான் குறித்த மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொள்ளவில்லை. மாணவியின் முதுகில் தான் தாக்கினேன் எனவும், நான் இந்த பாடசாலையில் முறையாக உரிய நேரத்தில் வேலைகளை செய்வதால் எனக்கு எதிராக இவ்வாறு ஆசிரியர்கள் மற்றும் அதிபர் பொய்யான முறையில் குற்றம் சுமத்தியுள்ளனர்” எனவும் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.