வவுனியா வைரவப்புளியங்குளத்தில் பதற்றநிலை : சம்பவ இடத்தில் பொலிசார்!!

403

வைரவப்புளியங்குளத்தில் பதற்றநிலை

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இன்று (18.02.2019) மாலை 5.30 மணியளவில் இளைஞர்கள் ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதற்றநிலை காணப்பட்டதுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

வவுனியா வைரவப்புளியங்குளம் வைரவர் வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியின் மறுபக்கத்திற்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் அதே வீதியில் மோட்டார் சைக்கில் ஒன்று வந்துள்ளது. முச்சக்கரவண்டி திரும்புவதனை தீடிரென அவதானித்த மோட்டார் சைக்கில் சாரதி மோட்டார் சைக்கிலினை வீதியினை விட்டு கீழே இறக்கியுள்ளார். இதன் போது மோட்டார் சைக்கில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டையிழந்து கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இச் சம்பவத்தினால் மோட்டார் சைக்கில் பகுதியளவில் சேதமடைந்ததுடன் எவ்வித உயிர்ச்சேதங்களும் இடம்பெறவில்லை.

இதன் போது அவ்விடத்தில் ஒன்றுகூடிய இளைஞர்கள் மோட்டார் சைக்கிலை முச்சக்கரவண்டியின் உரிமையாளர் தான் திருத்தித் தர வேண்டுமேன தெரிவித்தனர். இதன் காரணமாக அவ்விடத்தில் சற்று பரபரப்பான நிலை காணப்பட்டது.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். முச்சக்கரவண்டி திரும்புவதை அவதானிக்காமல் வந்தமை மோட்டார் சைக்கில் ஓட்டுனரின் தவறாகும். முன்னால் செல்லும் வாகனத்தினை அவதானிக்க முடியாமல் வந்திருந்தால் குறித்த மோட்டார் சைக்கில் அதிவேகமாகவே வந்திருக்க வேண்டும்.

அத்துடன் மோட்டார் சைக்கில் முச்சக்கரவண்டியுடன் மோதவுமில்லை அவ்வாறு மோதி விபத்து ஏற்பட்டிருந்தாலும் ஒர் வாகனத்தின் பின்புறத்தில் மோதியமை மோட்டார் சைக்கிலில் ஓட்டுனரின் தவறே ஆகும்.

வீதியினை விட்டு விலகி கீழே விழ்ந்தமை மோட்டார் சைக்கிலின் சாரதியின் கவனயீனமே என விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்ததுடன் குறித்த மோட்டார் சைக்கிலை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்வதற்குறிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.