வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூராக காணப்பட்ட 88 கட்டாகாலி மாடுகளை கைப்பற்றிய நகரசபை!!

512

88 கட்டாகாலி மாடுகளை கைப்பற்றிய நகரசபை

வவுனியா நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் சுற்றித்திரியும் கட்டாகாலி மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களினால் நகரசபை மீது முறைப்பாடுகள் முன் வைக்கப்பட்டது.

அதற்கமைவாக நேற்று முன்தினம் (17.02.19) இரவு வவுனியா பூந்தோட்டம், குருமன்காடு, தாண்டிக்குளம், பட்டாணிச்சூர் மற்றும் நகரப்பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றிருந்த 88 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன என்று வவுனியா நகரசபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாடுகளின் உரிமையாளர்கள் 1600 ரூபாவைச் செலுத்தி தங்களது மாடுகளை அழைத்துச் செல்லுமாறும் தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்குப் பராமரிப்புச் செலவாக 300 ரூபா மேலதிகமாக அறவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.