பேஷ்புக்கில் பதிவிட்ட இளைஞன் கைது!!

313

இளைஞன் கைது

பேஷ்புக் சமூக வலைத்தளம் ஊடாக பிட்டிகல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் முழு பொலிஸாருக்கும் அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை இட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிட்டிகல பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போலி பேஷ்புக் கணக்கை பயன்படுத்தி இந்த இளைஞன் பொலிஸாருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் பதிவுகளை பதிவேற்றம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான இந்த இளைஞன் பொரவகம, நாரான்ஹோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதானவர் எனவும் அவர் இன்று பிட்டிகல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.