யாழில் இரு வீடுகள் மீது குண்டுத் தாக்குதல் : வாகனங்கள் தீக்கிரை!!

263

 

யாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் பிரதேசத்தில் இன்று இரு வீடுகள் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் அடங்கிய குழுவொன்று வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் மற்றும் 2 மோட்டார் சைக்கிள் மீது தீ மூட்டிவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.