வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு!!

680

 

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களத்தின் பொது சுகாதார பரிசோதகர் எம்.தியாகலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி பசுபதிராஜா, பிராந்திய சுகதார சேவைகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மகேந்திரன், தொற்று நோயியல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் லவன், தாபரி கலாமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள், மற்றும் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது தொழுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளக் கூடிய வழிவகைகளை குறித்து ஆராயப்பட்டதுடன், தொழுநோய் கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தை கடந்த காலங்களில் முன்னெடுத்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.