50 பவுண் நகைக்காக நடிகையை கொலை செய்த காதலன்!!

336

நடிகை யாஷிகா

சென்னை கொளத்தூரில் கடந்த 12 ஆம் திகதி நடிகை யாஷிகா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். யாஷிகா இறந்துபோவதற்கு முன்னர் தனது தாய்க்கு வட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியுள்ளார்.

அதில், தன்னை நம்பி வந்த என்னை ஏமாற்றிவிட்டார், நான் இறந்தபிறகு எனது காதலன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து யாஷிகாவின் காதலன் அரவிந்தனை பொலிசார் கைது செய்தனர். மேலும் யாஷிகாவின் தாய் அளித்துள்ள புகாரில், வீட்டில் சுமார் 50 சவரன் தங்க நகை மாயமாகி உள்ளதாகவும், தமது மகளை அரவிந்த், நண்பர்களுடன் சேர்ந்து நகைக்காக கொலை செய்திருக்கலாம் என்று புகார் அளித்துள்ளார்.

யாஷிகாவின் உடலுக்கு அவசர அவசரமாக தாம் வந்து சேருவதற்கு முன்பாகவே இறுதி சடங்குகள் செய்திருந்ததாகவும், தம்மை கட்டாயப்படுத்தி யாசிகாவின் உடலை எரிப்பதற்கு கையெழுத்து வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.