திருமணம் முடிந்த அன்று இரவு ரத்தவெள்ளத்தில் கிடந்தேன் : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

782

இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

ஜேர்மானிய பெண் ஒருவர் திருமணம் முடிந்த அன்று இரவு, ரத்தம் தோய்ந்த இடத்தில் கடும் சித்ரவதைக்கு ஆளானதாக கூறியுள்ளார்.

சிரியாவில் இருந்து தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிய ஐந்து ஜேர்மன் ஐ.எஸ்.ஐ.எஸ் அங்கத்தவர்களில் ஒருவரான டெரீயா ஓ, தற்போது பொலிஸாரின் புலனாய்வு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து அவர் கூறுகையில்,, என்னுடைய இளம் வயதுகளில் நான் ஜேர்மனியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தேன். அப்போழுது தான் முதன்முறையாக மரியோ ஸ்கியன்னிமானிகாவை ஆன்லைனில் சந்தித்தேன். ராணுவ உடையில் கையில் துப்பாக்கியுடன் இருப்பதை பார்த்து மயங்கிவிட்டேன். இளம்வயது என்பதால் வேறு எதைப்பற்றியும் எனக்கு தோணவில்லை.

திருமணம் முடிந்துவிட்டதா என கேட்டதற்கு அவர் இல்லை என்று பதிலளித்தார். உடனே அவரை நான் திருமணம் செய்துகொண்டு துருக்கி நாட்டிற்கு புறப்பட்டேன். அப்பொழுது என்னை கட்டாயப்படுத்தி பர்தா உடையை அணிய வைத்தார்கள்.

முதலிரவுக்காக நான் சென்ற அறை முழுவதும் ரத்தம் தோய்ந்த சங்கிலிகள் கிடந்தன. அதை பார்த்ததும் நான் பயத்தில் உறைந்து போனேன்.

அதற்கு நடுவே பல சித்ரவதைகளை அனுபவிக்க ஆரமித்தேன். அதன்பிறகு நாங்கள் ஈராக்கிற்கு புறப்பட்டோம். அங்கு 2015-ம் ஆண்டு எனக்கு ஒரு குழந்தை பிறந்தது.

நான் ஸ்கியன்னிமானிகாவிடம் இருந்து விவாகரத்து கேட்டேன். அந்த சமயத்தில் தான், 2018-ம் ஆண்டு கொல்லப்பட்ட ஜேர்மனின் பிரபல பயங்கரவாதி டெனிஸ் கஸ்பெர்ட், என்னிடம் காதலை கூறினார்.

மிகவும் நல்ல மனிதன். நான் தங்குவதற்கு வீடு ஏற்பாடு செய்துகொடுத்தான். ஆனால் நான் அவனுடைய காதலை நிராகரித்துவிட்டேன்.

அதன்பிறகு பெல்ஜியன் ISIS தளபதி அபு சலாஹூடின் இரண்டாவது மனைவி ஆக முடிவு செய்தேன். அனைத்தும் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. 2 மாதம் கழித்து ட்ரோன் மூலம் அவர் கொலை செய்யப்படும் வரை.

எனக்கு கெட்ட அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. என்னை சுற்றியுள்ள அனைத்து ஆண்களுமே இறந்துவிடுகின்றனர். பின்னர் மீண்டும் என்னுடைய முதல் கணவனை தேடி சென்றேன். ஆனால் அவரை பொலிஸார் கைது செய்து கடும் சித்ரவதைகளை கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதற்கிடையில் மனித கடத்தல்காரர்களை பயன்படுத்தி, சிரிய-துருக்கிய எல்லைப்பகுதிகளை தாண்டி ஐ.எஸ்.ஐ.எஸ். பிரதேசத்திலிருந்து தப்பி ஓடிவிட்டேன் என கூறியுள்ளார்.