வவுனியா ஒமந்தையில் ஆரம்பமான நல் நிலைக்கான விழிப்புணர்வு இரண்டாம் நாளுக்கான நடைபயணம்!!

450

நல் நிலைக்கான விழிப்புணர்வு நடைபயணம்

குடும்ப புனர்வாழ்வு நிலையத்தினால் நல் நிலைக்கான பயணம் எனும் தொனிபொருளில் விழிப்புணர்வு நடைபயணம் நேற்று (23.02.2019) காலை வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி மாலை ஒமந்தையினை சென்றடைந்தது.

இதன் இரண்டாம் நாளுக்கான நடைபயணம் ஒமந்தை மத்திய கல்லூரிக்கு முன்பாக இன்று (23.02.2019) காலை 9 மணியளவில் ஒமந்தை கிராம சேவையாளர், பொது சுகாதார பரிசோதகர் தலமையில் ஆரம்பமாகி புளியங்குளம் நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

இப் பயணமானது வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு வரையுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை கடந்துசென்று எமது சமூக மத்தியில் உள்ள ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கிலும் குறித்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நடைபயணம் 26 ம் திகதி மாலை 3.00 மணியளவில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நிறைவடையவுள்ளது.