வடமாகாணத்திலுள்ள 6 பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய பொலிஸ் மெய்வல்லுநர் விளையாட்டு நிகழ்வுகள் இன்று காலை 6.35 மணியளவில் வடமாகாணத்தில் வவுனியாவில் இரண்டாவது தடவையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று காலை நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் பொலிஸ் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரமவினால் ஆரம்பமாகி 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்களாக நகரசபை மைதானத்தில் இடம்பெறுவதுடன் வடமாகாணத்திலுள்ள 6 பிராந்திய பிரதான பொலிஸ் நிலையங்களான காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய விளையாட்டு நிகழ்வுகள் நாளை மாலை 3 மணியளவில் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் றொசான் பெர்ணான்டோ தலைமையில் நிறைவு பெறவுள்ளது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரம, கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த குணரட்ண, வன்னி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.என்.தென்னக்கோன், வடமாகாணத்திலுள்ள 6 பிரதான பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.