மர்மமான முறையில் இறந்து கிடந்த இளம் பெண் இயக்குனர் : கொலையா? தற்கொலையா?

354

இளம் பெண் இயக்குனர்

இளம் மலையாள பெண் இயக்குனர் நயன சூர்யன், அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகிலுள்ள கருநாகப்பள்ளியை சேர்ந்த நயன சூர்யன், சினிமாவுக்காக திருவனந்தபுரத்தில் தங்கி இருந்தார். இவர் சமீபத்தில் மறைந்த பிரபல இயக்குனர் லெனின் ராஜேந்திரனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து பணியாற்றினார்.

பின்னர் பல விளம்பர படங்களையும் இயக்கினார். கடந்த 2017ஆம் ஆண்டு ‘பக்‌ஷிகளுடே மனம்’ என்ற படத்தை இயக்கிய நயன சூர்யன், ஏராளமான நாடகங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அவரது வீட்டிற்கு சென்ற பொலிசார், நயன சூர்யனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலதிக தகவல்கள் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை.