இலங்கையின் நட்சத்திர வீரர் சனத் ஜெயசூரியவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

664


சனத் ஜெயசூரியவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை



இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரியவிற்கு இரண்டு வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் சபையின் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் இரண்டு சரத்துக்களை மீறியமைக்காக, சர்வதேச கிரிக்கெட் சபையால் தடை உத்தரவு இன்று விதிக்கப்பட்டுள்ளது.



சர்வதேச கிரிக்கட் சபையின் ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 2.4.6 மற்றும் 2.4.7 ஆகிய சரத்துக்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்களை சர்வதேச கிரிக்கட் சபையின் ஊழல் எதிர்ப்பு குழுவின் முன்னிலையில் சனத் ஜயசூரிய ஒப்புக்கொண்டுள்ளார்.




ஊழல் விசாரணைகளுக்கு ஆதரவு வழங்காமை, சாட்சிகளை வழங்காமை, அந்த விசாரணைகளுக்காக முன்னிலையாகாமை, தடை ஏற்படுத்தியமை மற்றும் குறித்த ஆவணங்களை அழித்தமை ஆகியவை சனத் ஜயசூரிய மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆகும். எனவே சனத் ஜயசூரியவிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு கிரிக்கட் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.