வவுனியா நெடுங்கேணியில் வன்னி அறுசுவை உணவகம் திறந்து வைப்பு!!

419


நெடுங்கேணியில் வன்னி அறுசுவை உணவகம்



தேசிய ஒருமைபாடு மற்றும் நல்லிணக்க செயலகத்தின் நிதியில் அமைக்கபட்ட வன்னி அறுசுவை உணவகம் வவுனியா வடக்கு நெடுங்கேணியில் இன்று (07.03.2019) திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் முன்னாள் ஐனாதிபதியும் செயலகத்தின் பணிப்பாளருமான சந்திரிக்கா குமாரதுங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு உணவகத்தை திறந்து வைத்திருந்தார்.



காலை 9 மணிக்கு நெடுங்கேணி பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயலகத்தினால் வடக்கில் ஏற்படுத்தபட்டுள்ள வேலைத்திட்டங்கள் பற்றியும் எதிர்காலத்தில் மேற்கொள்ளபடவுள்ள வேலைதிட்டங்கள் தொடர்பாகவும் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முன்னாள் ஐனாதிபதி அதன்பின்னர் உணவகத்தை திறந்து வைத்திருந்தார்.




நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம், பிரதேசசபை தலைவர் இ.தணிகாசலம், அரசஅதிபர் எம். ஹனீபா, பிரதேச செயலர் க.பரந்தாமன், அரச அதிகாரிகள், பொலிசார் என பலர்கலந்து கொண்டனர்.