வவுனியாவில் தமிழ்மாமன்றம் நடாத்தும் தமிழ்மாருதம் கோலாகலமாக ஆரம்பம்!!

486


தமிழ்மாருதம்



கலை இலக்கியச் செயற்பாடுகளை மையமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழ் மாமன்றம் வருடாந்தம் நடாத்தும் பண்பாட்டு பெருவிழாவான “தமிழ்மாருதம்” வவுனியா நகரசபைக் கலாசார மண்டபத்தில் இன்றைய தினம் ஆரம்பமானது.



இம்முறை தமிழகத்திலிருந்து பிரபல பேச்சாளரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமாகிய இலக்கியச்சுடர் த.இராமலிங்கம் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தியிருந்தார்.




காலை 8.30 மணிக்கு வவுனியா விபுலானந்தர் சிலை முன்பிருந்து ஆரம்பமாகிய பண்பாட்டு ஊர்வலம் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தை வந்தடைந்தது. ஏனைய நிகழ்வுகளான வில்லுபாட்டு, ஆடலரங்கம், நாடகம், விவாதம் என்பனவற்றுடன் இன்றைய அமர்வு இடம்பெற்று வருகின்றது.


இலங்கையின் பிரபல புத்தக நிலையங்களின் ஒன்றிணைவில் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் இடம்பெற்று வருகின்றது. இரண்டாம் நாள் அமர்வுகள் நாளையதினம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.