வவுனியாவில் சர்வதேச மகளிர் தினம்!!

519

சர்வதேச மகளிர் தினம்

வவுனியா மாவட்ட செயலகம் , மாவட்ட சமூக சேவை அலுவலகம், மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களம், அரசார்பற்ற நிறுவனங்கள் என்பன மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து நடாத்துகின்ற,

“சிறப்பான உலகிற்கு சிறந்த ஒரு பெண்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின விழாவும் உள்ளூர் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இன்று (11.03.2019) காலை 10.30 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

விருந்தினர்கள் மாலை அணிவித்து வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகளின் பாண்ட் வாத்திய இசையுடன் நகரசபை கலாச்சார மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தேசியக் கொடியினை வடக்கு மாகாண நிதி திட்டமிடல் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் திருமதி நளாயினி இன்பராசா தேசிய ஏற்றிவைத்ததுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அதன் பின்னர் விருத்தினர்களினால் உள்ளூர் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனை நிலையம் நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் , வரவேற்பு நடனம் , அதிதிகள் உரைகள் , நடனம் , கௌரவிப்பு நிகழ்வு என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் முஹமட் ஹனீபா கலந்து கொண்டிருந்ததுடன்,

கௌரவ விருந்தினர்களாக வடக்கு மாகாண நிதி திட்டமிடல் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி நளாயினி இன்பராசா, வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம், வவுனியா வடக்கு வலய கல்விப்பணிப்பாளர் சுரேந்திரன் அன்னமலர் மற்றும்,

சிறப்பு விருந்தினர்களாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின உதவிப்பணிப்பாளர் கனோஜன், வெண்கல சட்டிக்குள பிரதேச செயலாளர் க.சிவகரன் மற்றும், வவுனியா மாவட்ட செயலக உயர்மட்ட உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள்,

சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொலிசார், பொதுமக்கள், மாணவர்கள், வங்கி ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.