தூக்கில் சடலமாக தொங்கிய 17 வயது பாடசாலை மாணவி : விசாரணையில் வெளியான உண்மை!!

1032


தூக்கில் தொங்கிய பாடசாலை மாணவி



தமிழகத்தில் ப்ளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியில் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் ஜனனி (17). இவர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.



இந்நிலையில் பொதுத்தேர்வு நடந்து வருவதால், நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு படிக்க சென்றார் ஜனனி. காலை விடிந்து நீண்டநேரம் ஆகியும் அவர் கீழே இறங்கி வராததால் பெற்றோர் மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்த போது ஜனனி மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தார்.




இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் ஜனனியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜனனியின் தோழி ஒருவர் இறந்து போனார். இதனால் அவர், மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் ஜனனி தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.