வவுனியாவில் 360 மில்லியன் ரூபா செலவில் சூரிய மின்கலத் தொகுதி திறந்து வைப்பு!!

358


சூரிய மின்கலத் தொகுதி



வவுனியா நெடுங்குளத்தில் 360 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத்தொகுதி இன்று (14.03) மின்சக்தி எரிபொருள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வின் முன்னதாக அதிதிகள் கண்டிய நடனத்துடன் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.



சூரிய மின்சக்தி அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா நெடுங்குளத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ‘வின்போஸ்’ என்ற தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின்கலத் தொகுதியிலிருந்து ஏழு ஆயிரம் வோல்டேஜ் மின்சக்தி பெறப்படுகிறது.




பெறப்படும் மின்சக்தியானது இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டு தேசிய ரீதியில் பயன்படுத்தப்படுகிறது.


நிகழ்வில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீனும் கலந்து கொண்டு சூரிய மின்கலத் தொகுதியின் கட்டிடத்தின் பெயர் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சூரிய மின்கலத் தொகுதியின் செயற்பாடு தொடர்பான தகவல்கள் அமைச்சர்களுக்கு நிலையத்தின் அதிகாரிகளால் தெளிவுபடுத்தப்பட்டது.


நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் கருணாதாச, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.