இரு இளைஞர்களின் உயிரைப் பறித்த கோர விபத்து!!

333


கோர விபத்து



சிலாபம் – கொழும்பு வீதியின் சம்பல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று காலை 8 மணியளவில் நடந்த விபத்தில் ஆனமடுவ மஹா உஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.



மோட்டார் சைக்கிளில் சென்ற இந்த இளைஞர்கள் முன்னால் சென்றுக்கொண்டிருந்த வான் ஒன்றை முந்திச் செல்ல முயற்சித்த போது வானின் பின்பகுதியில் மோதுண்டு புரண்டு விழுந்துள்ளனர்.




அப்போது எதிர்புறமாக வந்த பேருந்து இளைஞர்கள் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த இளைஞர்கள், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.