கோர விபத்தில் மூன்று பிள்ளைகளையும் தவிக்கவிட்டு உயிரிழந்த தாய் தந்தை!!

338

கோர விபத்து

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் பொல்கஹாவெல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிற்றூர்ந்து (வேன்) ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தை மற்றும் வயோதிப பெண் ஒருவர் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் பிள்ளைகள் மூவரும் காயமடைந்த பொல்கஹாவெல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.