பாவனையாளர் தினம்
சர்வதேச பாவனையாளர் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையால் விழிப்புணர்வு நிகழ்வும் பரிசோதனையும் நேற்று(15.03) காலை நடைபெற்றது.
வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் தலைமையில் வர்தக நிலையங்களிற்கு சென்ற அதிகாரசபையினர் பொதுமக்களோடு கலந்துரையாடியிருந்ததுடன் பாவனையாளரின் உரிமைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தனர்.