வவுனியாவில் 9 கிலோ கேரள கஞ்சாவுடன் வந்த நபருக்கு நேர்ந்த கதி!!

705


கேரள கஞ்சா



வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்றிரவு (15.03.2019) 11 மணியளவில் 9 கிலோ கேரள கஞ்சாவுடன் ஜா- ஏல பகுதியினை சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். புளியங்குளம் நகர்ப் பகுதியில் நேற்றையதினம் புளியங்குளம் பொலிஸாருடன் இணைந்து ஒமந்தை பொலிஸாரும் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.



இதன் போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தினை மறித்து சோதனையிட்ட சமயத்தில் 9கிலோ கேரள கஞ்சாவினை பயணப்பொதியில் வைத்திருந்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.




கைது செய்யப்பட்டுள்ள நபர் ஜ- ஏல பகுதியினை சேர்ந்த 54 வயதுடையவர் எனவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.