சூரியன் விழுகின்ற கடலினில்
என்னை நனைய விடு..!
விரிகின்ற வெளிகளில் தனிமையின்…
கவிதையை படிக்க விடு..!
மழை பொழிகின்ற வேளையினில்
மரங்களின்… வேர்களாய் மகிழ விடு..!
ஒளிர்கின்ற மெழுகினில் உன் பிரிதலின்…
வலியினை கருக விடு..!
அலைமோதும் ஓசையினில் உரிமையாய்…
எனதன்பினை எடுத்து விடு..!
தினம் விடிகின்ற பொழுதினில்
உன் விழித்திரை விம்பமதில்
எனை விழுத்தி விடு..!
-மித்யா கானவி-