இந்துக் கோயில்களை பாதுகாப்போம் – மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்..

702

வடக்கு கிழக்கில் இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்படுதல் மற்றும் கொள்ளையிடுதலை கண்டித்தும் இந்து ஆலயங்களை பாதுகாக்க கோரியும் ´இந்துக் கோயில்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் இலங்கைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று மட்டக்களப்பு அரசடி வைத்தியசாலை சந்தியில் இடம்பெற்றது.

உலகளாவிய ரீதியில் உள்ள இந்து ஆலயங்களையும் மற்றும் இந்துக்களையும் பாதுகாக்கும் அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் இலங்கைக் கிளையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.எஸ்.சுதர்சனன் தலைமையில் இடம்பெற்ற இப்போராட்டத்தில், மாவட்டத்திலுள்ள பல இந்து அமைப்புக்கள் பங்குபற்றின.

அண்மையில் வடகிழக்கில் உள்ள பல இந்துக் கோயில்கள் உடைக்கப்பட்டு களவாடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இது விடயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் நடவடிக்கையெடுக்க வேண்டும் என வலியுறுத்தி மகஜர்கள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இம்மகஜரில் இந்து இளைஞர் மன்ற தலைவர் எம்.பவளகாந்தன், இந்து ஆலயங்கள் ஒன்றிய செயலாளர் எஸ்.புஸ்பலிங்கம், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் இலங்கைக் கிளையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.எஸ்.சுதர்சனன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

hindu