வவுனியா விக்ஸ்காடு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு!!

294

 

வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட விக்ஸ்காடு கிராமத்திற்கு வீட்டுத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (18.03.2019) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

‘எல்லோருக்கும் வீடு’ எனும் தொனிப்பொருளில் அமைந்த இவ்விழா தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட முகாமையாளர் குரூஸ் தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக விக்ஸ்காடு கிராமத்தில் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந் நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மாவட்ட முகாமையாளர், உதவி மாவட்ட முகாமையாளர், உதவி பொறியியலாளர் மற்றும் பிரதேச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், இராசேந்திரகுள கிராம சேவையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்,

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், ஸ்ரீரேலோ கட்சியின் இளைஞர் அணித் தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இக் கிராம மக்கள் வவுனியா பிரதேச செயலகத்தில் பலதடவைகள் மேற்கொண்ட கோரிக்கைக்கமைவாக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜாவின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினரால் ஒரு வீட்டிற்கு 7,50,000 ரூபா வீதம் 25 வீடுகள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.