வவுனியா அரபாநகரில் ஆதரவற்ற இஸ்லாமிய சிறுவர்களுக்கான சிறுவர் இல்லம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானால் நேற்று (18.03) திறந்து வைக்கப்பட்டது.
பல்வேறு இடர்பாடுகளுடன் செயற்பட்டு வந்த குறித்த சிறுவர் இல்லத்தினை வாமி நிறுவனத்தின் அனுசரனையில் நூர் நிறுவனத்தினால் ஏழு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
மௌளவி கே.எம்.அஜாத் தலைமையில் இடம்பற்ற இந்நிகழ்வில் வாமி நிறுவனத்தின் சவுதி தலையைத்தின் உத்தியோகத்தர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், நகரசபை உறுப்பினர் பாரி, வாமி நிறுவனத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் நஜிமான் சாகீப், ஐஎஸ்ஆர்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜனாப் மிகிலார் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.