நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி செய்தி : விரைவில் நாடுமுழுவதும் மின்வெட்டு?

656

விரைவில் நாடுமுழுவதும் மின்வெட்டு?

நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஓர் இயந்திரம் திடீரென செயலிழந்துள்ள காரணத்தினால் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஓர் இயந்திரம் இன்று முற்பகல் 11.00 மணி முதல் செயலிழந்த காரணத்தினால் தேசிய மின் விநியோகத்திற்கு வழங்கப்பட்டு வந்த 270 மெகாவோட் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பில் இருந்து செயற்பட்டு வந்த மின் உற்பத்தி நிலையமொன்றிலிருந்து விநியோகிக்கப்படும் 60 மெகாவோட் மின்சாரமும் தற்பொழுது கிடைக்கப் பெறுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு வார காலமாக இந்த மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளது.

நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி 50 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலைமையின் கீழ் இடைக்கிடை மின்சாரம் துண்டிக்கப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மின்சார சபை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.