கொழும்பில் ஒன்றின் பின் ஒன்றாக வாகனங்கள் மோதி விபத்து!!

312

கொழும்பில் விபத்து

கொழும்பு, மட்டக்குளி – அளுத்மாவத்தை பகுதியில் நேற்று இரவு வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தினை அடுத்து அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

வான் ஒன்றுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. எனினும், இதனை தொடர்ந்து வந்த கார் மற்றும் லொறி என்பன ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.