வவுனியா சிறைச்சாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இளைஞன் கைது!!

333

இளைஞன் கைது

வவுனியாவில் 3 கிராம் 910 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா போலிசார் தெரிவித்தனர்.

நேற்று(19.03) மாலை வவுனியா சிறைச்சாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலைய போதைதடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது.

அதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற போலிஸ் பொறுப்பதிகாரி உசாந்த தலைமையில், சாயன் யெகத், கான்ஸ்டபிள்களான மிதுசன், சமன், ருவன்குமார, பண்டார, தெனியகொட ஆகியோரை கொண்ட பொலிஸ் குழுவினர் குறித்த இளைஞனை சோதனைசெய்த போதே அவரிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் வவுனியா தேக்கவத்தை, பகுதியை சேர்ந்த 19வயதான இளைஞர் ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளார். குறித்தநபர் மதில் ஊடாக சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கடத்துவதற்காகவே நின்றிருந்ததாக போலிசார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.