பிரித்தானியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கை தமிழ் கணவன் : மனைவி கைது!!

634

கொடூரமாக கொலை

பிரித்தானியாவில் 67 வயதான இலங்கையரை கத்தியால் குத்தி கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் பல முறை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் குறித்த இலங்கையர் உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவின் Burdock Close, Wymondham, Norfolk பகுதியில் வாழ்ந்த கடை உரிமையாளரான ராஜசிங்கம் குமாரதாஸ் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று இரவு 11.50 மணியளவில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், தலை மற்றும் நெஞ்சு பகுதியில் கடும் காயங்களுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் குறித்த நபரை மீட்டுள்ளனர். காயமடைந்த வரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். எனினும் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 60 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை தாம் ஆரம்பித்துள்ளதாக புலனாய்வு ஆய்வாளர் Kate Thacker தெரிவித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு குமரதாஸ் மற்றும் அவரது மனைவி 195,000 பவுண்ட் செலவில் கொள்வனவு செய்த 3 படுக்கையறை கொண்ட வீட்டை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர். இலங்கையரான குமாரதாஸ் சொந்தமான சுப்பர் மார்க்கெட் ஒன்றையும் நடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்திற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பிரித்தானியாவில் 73 வயதான இலங்கை தமிழ் பெண் ஒருவரே தனது கணவனை அடித்துக் கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். கணவனின் கொடுமைப்படுத்தல் மற்றும் தவறான நடத்தை காரணமாக மனைவி இவ்வாறு கொலை செய்துள்ளார் என பிரித்தானியா நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.