மதுபோதையில் பச்சிளம் குழந்தையை பொல்லால் தாக்கிய தந்தை!!

1159

குழந்தையை பொல்லால் தாக்கிய தந்தை

அநுராதபுரம் – நொச்சியாகமை பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட குடும்ப தகராறில், கணவன் பொல்லால் மனைவியை தாக்க முயற்சித்த போது, அது மூன்று மாத குழந்தையின் மீது பட்டத்தில் குழந்தை படுகாயமடைந்துள்ளது.

இநத தகராறு முற்றிதால், ஆத்திரமடைந்த கிராமவாசிகள் அந்த நபரை தாக்கி மரத்தில் கட்டி வைத்து நொச்சியாகமை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் நொச்சியாகமை, கட்டலுபத்வெவ, கபரகொய்யா வெவ பிரதேசத்தில் நேற்று மாலை நடந்துள்ளது.

தகராறின் போது மதுபோதையில் இருந்த கணவன், பொல்லால் மனைவியை தாக்கிய போது, மனைவி கையில் வைத்திருந்த குழந்தை மீது அந்த அடிப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக கிராமவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.