வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெண்ணின் வயிற்றில் சிக்கிய மர்மம்!!

262

பெண்ணின் வயிற்றில் சிக்கிய மர்மம்

வெளிநாட்டிலிருந்து பெருந்தொகை கொக்கொய்ன் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை விழுங்கிய நிலையில் வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் செய்யும் நோக்கில் வெனிசியூலாவில் இருந்து பெருந்தொகை கொக்கொய்னை விழுங்கி நிலையில், இலங்கைக்கு வந்த பெண் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டுள்ளார்.

68 வயதான குறித்த பெண்ணுக்கு கடுமையான வேலையுடன் கூடிய வாழ் நாள் முழுவதும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு நீதிமன்ற நீதிபதியினால் நேற்றைய தினம் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மூன்றாம் தினதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிகப்பட்ட அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்த கொக்கொய்ன் போதைப்பொருள் வெளியே எடுக்கப்பட்டது. அதன் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.