க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

395

முக்கிய அறிவிப்பு

க.பொ.த உயர்தர மாணவர்கள் தமது தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை மார்ச் 31இற்குள் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ளது.

அதிகமான மாணவர்கள் இன்னும் தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை அனுப்பவில்லை என்பதன் காரணமாகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பங்களிலும் பல்வேறு பிழைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.