தூக்கத்திலிருந்து எழாமல் இருந்த இளம்பெண் : நேர்ந்த விபரீதம்!!

352


நேர்ந்த விபரீதம்



தமிழகத்தில் உயிருக்கு உயிராக நேசித்த காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுகுமார் (26). இவர் 2 ஆண்டுகளாக ரோந்து பொலிசில் தற்காலிக பணியில் இருந்தார். இந்நிலையில் வைஷ்ணவி (20) என்ற கல்லூரி மாணவியும், சுகுமாரும் காதலித்து வந்தனர்.



இந்த காதல் இரு குடும்பத்தாருக்கும் தெரியவந்த வந்த நிலையில் சுகுமாரின் பெற்றோர், வைஷ்ணவி பெற்றோரிடம் சென்று பெண் கேட்டனர். அதற்கு, வைஷ்ணவி கல்லூரியில் படித்து வருவதால் 2 ஆண்டுகள் கழித்து இது குறித்து பார்க்கலாம் என அவர் குடும்பத்தார் கூறியதாக தெரிகிறது.




இந்நிலையில் சுமாருக்கு மத்திய ரிசர்வ் பொலிசில் வேலை கிடைத்ததால் டெல்லிக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து சுகுமாருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்து வேறு இடத்தில் பெண் பார்த்து கடந்த வாரம் நிச்சயதார்த்தம் செய்தனர்.


இதுபற்றி தகவல் அறிந்த வைஷ்ணவி சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் காலை வெகு நேரமாகியும் அவர் எழுந்திருக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், வைஷ்ணவியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு வைஷ்ணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பொலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


பின்னர் வைஷ்ணவியின் உடல் நேற்று காலை வீட்டிற்கு வந்த நிலையில் அவரது உறவினர்கள் வைஷ்ணவியின் சாவுக்கு காரணமான சுகுமாரை கைது செய்ய வலியுறுத்தி முக்கிய சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன் பின்னர் பொலிசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.