காட்டுப் பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!!

237

ஆணொருவரின் சடலம் மீட்பு

ஹொரவ்பத்தான பிரதான வீதி, பன்மதவாச்சி காட்டு பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று (20.03) காலை 9.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பன்குளம், பன்மதவாச்சி பகுதியை சேர்ந்த 57 வயதுடைய முத்துலிங்கம் ஸ்ரீதர் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. வீட்டிலிருந்து காட்டு பகுதிக்கு முச்சக்கரவண்டியில் பயணித்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.