யாழில் கார் சாரதியை வழிமறித்து தாக்குதல்!!

361

வாள் வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் வேம்படி விதியில் கார், மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த கார் சாரதி மீது நேற்று மதியம் மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கோவில் வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த குணசிங்கம் ரஜீவ்குமார் என்பவரே படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

யாழ்.நகரில் கார் ஓட்டுனராக இருக்கும் குறித்த சாரதி பயணிகளை ஏற்றிக் கொண்டு வேம்படி வீதியால் நேற்று மதியம் பயணித்துக் கொண்டிருந்த போது கறுப்பு நிற கார் ஒன்று இவர்களை இடை மறுத்துள்ளது. அதே நேரத்தில் 5 மோட்டார் சைக்கிள்களில் வாள்கலுடன் வந்த மர்ம குழு கார் சாரதியை வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.

படுகாயமடைந்த சாரதியை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.