கடலுக்கருகில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளம்பெண் : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

565

அதிர்ச்சி சம்பவம்

பாலித்தீவில் கடலுக்கு அருகில் ஒரு பாறையின் விளிம்பில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஒரு இளம்பெண், போட்டோ எடுத்து முடிக்கும்போது அங்கு இல்லை. கொந்தளிக்கும் அலைகளின் பின்னணியில் கைகளை அகல விரித்துக் கொண்டு அந்த அழகிய இளம்பெண் நிற்பதைப் பார்த்தால் எடுக்கும் புகைப்படம் அழகாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

ஆனால் ராட்சஷ அலை ஒன்று வருவதை உணராமல் அவர் போஸ் கொடுக்க, வந்த அலை அவரை வாரிக் கொண்டு போய் விட்டது.வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் அந்த பெண் போஸ் கொடுப்பது தெரிகிறது, அடுத்த ஷாட்டில் அவரைக் காணவில்லை. அப்புறம் பார்த்தால், இன்னொரு வீடியோவில் கை கால்களில் இரத்தத்துடன் பரிதாபமாக அவர் உட்கார்ந்திருப்பதைத்தான் பார்க்க முடிகிறது.

பலமாக அடித்த அந்த அலை அவரை தூக்கியடித்ததில், கரடு முரடான பாறைகளில் போய் விழுந்திருக்கிறார் அந்த பெண். இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவின் கீழ், எச்சரிக்கை, இப்படி கடலின் அருகே நிற்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை புரிந்து கொள்வதற்காக இந்த வீடியோ வெளியிடப்படுகிறது. விளிம்பிலிருந்து 20 மீற்றர் தள்ளி நின்றாலும் உங்களுக்கு அருமையான ஒரு வியூ கிடைக்கும் என்று எழுதப்பட்டுள்ளது.