வவுனியாவில் நீதவான் முன்னிலையில் கழுத்தினை அறுத்துக்கொண்ட நபரினால் பரபரப்பு!!

454

கழுத்தினை அறுத்துக்கொண்ட நபரினால் பரபரப்பு

வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் நபர் ஒருவர் தனக்கு ஆறு மாத சிறைத்தண்டனை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (22.03.2019) மாலை 3.30 மணியளவில் கழுத்தினை அறுத்தக்கொண்டமையினால் சற்று பரபரப்பான நிலை காணப்பட்டது.

வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழங்குகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. இதன் போது வழங்குக்காக சென்றிருந்த நபர் ஒருவர் நீதிமன்றத்தின் செயற்பாட்டினை குழப்பும் விதத்தில் நடந்து கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதவான் குறித்த நபருக்கு ஆறுமாத கால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

இதன் நிமித்தம் பொலிசாரால் அவர் நீதிமன்ற கூண்டுக்குள் அடைக்கப்பட்டார். இதன் போது தனது பையில் வைத்திருந்த சிறிய பிளேடால் அவரது கழுத்தை அறுத்துள்ளார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் இருந்த பொலிஸார் குறித்த நபரை வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதித்தனர். குறித்த சம்பவத்தில் கற்பகபுரத்தை சேர்ந்த 33வயதுடைய நபரே காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.