வவுனியாவில் புதையல் தோண்டியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

659

காத்திருந்த அதிர்ச்சி

வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊஞ்சல்கட்டு பகுதியில் புதையல்களுடன் முச்சக்கரவண்டியில் சென்ற நால்வரை புளியங்குளம் பொலிஸார் நேற்று (22.03.2019) மாலை 4 மணியளவில் கைது செய்துள்ளனர்.

குறித்த நான்கு நபர்கள் ஊஞ்சல்கட்டு காட்டுப்பகுதியில் பேக்கோ மூலம் புதையல் தோண்டியுள்ளனர். இதன் போது பழைய காலத்து புத்தர் சிலை, கல்வெட்டு, கலசம், விளக்கு போன்ற பல பொருட்களை எடுத்துள்ளனர்.

பொருட்களை முச்சக்கரவண்டியில் கடத்திச் செல்ல முற்பட்ட சமயத்தில் புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் குறித்த நான்கு நபர்களை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த வாகனம் மற்றும் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய 35,35,40,42 வயதுடைய தலவாக்களை , திருகோணமலை , மட்டக்களப்பு, நெடுங்கேனி பகுதியினை சேர்ந்த நான்கு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும்,

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களிடமிருந்து கைப்பற்ற பொருட்கள் மற்றும் பேக்கோ, முச்சக்கரவண்டி போன்றவற்றை வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.