4 சடலங்களுடன் ஒருமாத காலம் குடியிருந்த இளம் தம்பதி : அம்பலமான கொடூர கொலை!!

278


கொடூர கொலை



ரஷ்யாவில் இளம் தம்பதி ஒன்று தாயார் உள்ளிட்ட தங்கள் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரை கொன்று, சடலங்களுடன் ஒருமாத காலம் தங்கியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ரஷ்யாவின் Sverdlovsk பிராந்தியத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.



இந்த விவகாரத்தில் 24 வயதான அனஸ்தேசியா ரைபுகீனா மற்றும் அவரது காதலன் 22 வயதான அலெக்சாண்டர் நெடுனேவ் ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.




குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் தாயார் மற்றும் சகோதரியை அனஸ்தேசியா கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்துள்ளார். மேலும் இன்னொரு உறவினரை அலெக்சாண்டர் கொலை செய்துள்ளார். இவர்கள் மூவரின் உடலையும் நிலத்தடி அறையில் மறைவு செய்துள்ளனர்.


மட்டுமின்றி, தமது காதலியுடன் நெருக்கமாக பழகியதாக கூறி Oleg Dryabin என்ற 30 வயது நபரை கழுத்தை அறுத்து அலெக்சாண்டர் கொலை செய்துள்ளார். அந்த நபரின் உடலை மூன்று வாரங்களுக்கு பின்னர் இவர்களது அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அனஸ்தேசியாவுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அவரது காதலனுக்கு ஆயுள் தண்டனையும் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.