இலங்கையிலிருந்து மனைவியை பார்க்க லண்டன் செல்ல முற்பட்டவருக்கு நேர்ந்த கதி!!

860

வெளிநாட்டு பிரஜை

சட்டவிரோதமான முறையில் பிரித்தானிய செல்ல முற்பட்ட வெளிநாட்டு பிரஜை இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவரை டுபாய்க்கு நாடு கடத்துவதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 32 வயதான ஈராக் நாட்டவர் ஒருவரையே குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.

டுபாயிலிருந்து இலங்கை வந்த நபர் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரிடம் நீண்ட நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டுள்ளார். அவர் பிரித்தானியர் போன்று மிகவும் சரலமாக ஆங்கிலம் பேசியுள்ளார். தான் பிரித்தானியர் எனவும் தனது மனைவியை பார்க்க செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அதிகாரிகள் இந்த நபரின் கடவுசீட்டை விசேட தொழில்நுட்பம் பயன்படுத்தி சோதனையிட்டது.

இதன்போது பிரித்தானியா கடவுச்சீட்டிற்கு பயன்படுத்தப்படும் விசேட பாதுகாப்பு பொருள் ஒன்று அதனுள் இல்லமையினால் அது போலி கடவுச்சீட்டு என தெரியவந்துள்ளது. அதன் பின்னர் அவரது பயண பையை சோதனையிட்ட போது மறைத்து வைக்கப்பட்ட அவரது ஈராக் கடவுச்சீட்டு குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் பல விமான நிலையங்கள் ஊடாக இலங்கை வந்த போதிலும் வேறு நாட்டு அதிகாரிகளினால் இவர் போலி கடவுச்சீட்டு பயன்படுத்துவதனை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.