வவுனியா நகரசபைக்கு சொந்தமான வாகனம் தீப்பிடிப்பு!!

514

வாகனம் தீப்பிடிப்பு

வவுனியா நகரசபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெக்கோ வாகனம் நேற்று (23.03) இரவு தீப் பிடித்து எரிந்துள்ளது.

நேற்று மாலை பணிகளை முடித்துக்கொண்டு குறித்த வாகனம் நகரசபை வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு 10 மணியளவில் குறித்த வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது.

எனினும் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைத்துள்ளனர். மின்சார ஒழுக்கே தீ விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு அளித்துள்ளதுடன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.