இறுதி யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஆட்லறியை ஆராய்ந்த 6 வயதுச் சிறுவன்!!

774

ஆட்லறி

இறுதி யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஆட்லறி எறிகனையின் வெற்றுக்கோது ஒன்று இன்று முள்ளிவாயக்கால் பகுதியில் கண்பிடிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒருவர் அவருடைய சொந்த காணியை இன்று சீராக்கிய போதே குறித்த ஆட்லறி எரிகணையின் வெற்றுக்கோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இரண்டு தரப்புக்களினாலும் பயன்படுத்தப்பட்ட அபாயகரமான சில வெடிபொருட்களை அண்மை நாட்களில் பொதுமக்களினால் அடையாளம் காட்டப்பட்டதற்கு அமைவாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் அதிரடிப்படையினாரால் மீட்க்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டுள்ளது.

எனினும் யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் முள்ளிவாய்கால் உள்ளிட்ட பிரதேசங்களில் அபாயகரமான வெடிபொருட்கள் இன்னமும் முற்றும் முழுதாக மீட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இன்று தனியார் ஒருவருடைய காணியில் இருந்து மீட்கப்பட்ட ஆட்லறி வெற்றுக்கோது அபாயகரமானதாக இல்லாத போதும் யுத்த பாதிப்பை சந்திக்காத (புதிய தலைமுறை) ஆறு வயது சிறுவன் ஒருவர் அது தொடர்பில் ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.